அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடியரசுத் தலைவர் தேர்தல்: சமூகத்தின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை, தலித் சமூகத்தினருக்கு இடையேயான போட்டியாகக் கூறுவது, நமது சமூகம் இன்னமும் ஜாதிய ரீதியில் சிந்திக்கிறது என்பதை அம்பலப்படுத்தி விட்டது என்று எதிர்க்கட்சிகளின் பொது

News image
Updated On :13 ஜூலை 2017, 7:48 pm

DIN

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை, தலித் சமூகத்தினருக்கு இடையேயான போட்டியாகக் கூறுவது, நமது சமூகம் இன்னமும் ஜாதிய ரீதியில் சிந்திக்கிறது என்பதை அம்பலப்படுத்தி விட்டது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார் கூறினார். வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதல் முறையாக, கொள்கை அடிப்படையிலான போட்டியாக, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், இந்தத் தேர்தலை இரு தலித் சமூகத்தினருக்கு இடையேயான தேர்தலாக வர்ணிப்பது மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
இதனால், சமூகம் இன்னமும் ஜாதிய ரீதியில்தான் சிந்திக்கிறது என்பது அம்பலமாகிவிட்டது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அதேசமயம், இதுபோன்ற விஷயங்கள் இன்னமும் விவாதிக்கப்படுவது கண்டு வருத்தமடைகிறேன். நாம் ஜாதியக் கட்டமைப்புக்குள்ளேயே சிக்கிக் கொண்டிருந்தால், ஒருபோதும் முன்னேற முடியாது.
இதற்கு முன்பு பலமுறை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்தல்களில், உயர்ஜாதி என்று சொல்லப்படும் வகுப்பினர் போட்டியிட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம், அவர்களின் திறமைகள், தகுதிகள், சாதனைகள் ஆகியவை விவாதப்பொருளாக இருந்தன. அவர்களின் ஜாதி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இந்த முறை மட்டும், ஜாதி என்பதைத் தாண்டி வேறு எதுவும் விவாதிக்கப்படவில்லை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறுகலான, பிற்போக்கான சிந்தனைகளுடன் நாம் இருந்தால், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியாது.
தலித் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. அவர்களின் சார்பில் குரல் கொடுக்கவே, தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டில் நம் மதத்தை பின்பற்றுவது மட்டுமன்றி, பிறரின் மதங்களையும் மதிக்கவும் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பண்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மீரா குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.