தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பு: அமெரிக்கா கவலை

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2017, 7:33 pm

DIN

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு சாலை அமைக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, அப்பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
இணைந்து செயல்பட வேண்டும்: இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹிதர் நவர்ட், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லையில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை நிறுத்தியுள்ளது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. பதற்றத்தை தணிக்கும் வகையில் இருதரப்பும் பேச்சு நடத்தும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம். இதற்காக அந்த இரு நாடுகளின் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஆயுத பலத்தை அதிகரிக்கிறது சீனா: இதனிடையே, சீனா ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் (செனட்) ராணுவ ஆயுதப் பிரிவுக் குழுவுக்கு, அமெரிக்க விமானப்படை தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பால் செல்வா தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பொருளாதார வளர்ச்சியால் கிடைந்த பயன்கள் மூலம் சீன ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. அதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் தனக்குத் தேவையானதை சாதிக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் ஆயுத பலத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தனது ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
டோகாலாம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் சீனா, அடுத்த கட்டமாக வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியாவின் மற்ற பகுதிக்கும் இடையிலான தரைவழித் தொடர்பை தூண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்பது இந்தியத் தரப்பின் கவலையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.