குர்கான்: தனது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் எரிச்சலான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர். மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ளது சிவில் லைன்ஸ் பகுதி. இங்கே ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராகவ் என்பவர் வசித்து வருகிறார்.இந்த பகுதியில் சமீபத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராகவ் கடுமையான எரிச்சலிலில் இருந்துள்ளார். நேற்று மாலை மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் லைன் ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அங்கே வந்த ராகவ் தன கையில் இருந்த துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சில ரவுண்டுகளை சுட்டார்.பின்னர் பணியில் இருந்த ஊழியர்களை நோக்கியும் அவர் சுட்டிருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டுகள் படவில்லை. அவரது இந்த செய்கையினால் அங்கே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின்னர் உடனடியாக அவர் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ராகவ் மீது தற்பொழுது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


