தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விவசாயக் கடன் ரத்து இல்லை: அருண் ஜேட்லி அறிவிப்பு

விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி

News image
Updated On :20 ஜூன் 2017, 8:01 am

DIN

புதுதில்லி: புதுதில்லி: விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வது குறித்த பரிசீலனை மத்திய அரசிடம் இல்லை என கூறினார்.

மேலும், இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்கள், தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்காக ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கூட்டத்தில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்கள். மன்மோகன்சிங், தேவ கவுடா ஆகியோர் பங்கேற்கின்றனர். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு அருண் ஜேட்லியின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.