மீரா குமாருக்கு மாயாவதி கட்சி ஆதரவு
குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமாரை ஆதரிப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.


குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமாரை ஆதரிப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.
இதுதொடர்பாக, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், தொடக்க காலத்தில் இருந்தே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறுகிய சிந்தனைகளைக் கொண்டுள்ளார். இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரின் தகுதிகளை ஒப்பிடுகையில், ராம்நாத் கோவிந்தைவிட மீரா குமார் பிரபலமானவர், திறமை மிக்கவர். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாரை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்று மாயாவதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...