அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி வியாழக்கிழமை (ஜூன் 29) அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

News image
Updated On :28 ஜூன் 2017, 11:01 pm

DIN

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி வியாழக்கிழமை (ஜூன் 29) அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவரும் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10}ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
குடியரசு துணைத் தலைவரை மாநிலங்களவை உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் தேர்வு செய்வர். இரண்டு அவைகளையும் சேர்த்து மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 790. எனினும், பல இடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே, கோவா மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூலை 21}ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த ஆணையம் தெரிவித்தது.
கோவாவைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாராம் நாயக்கின் பதவிக்காலம் ஜூலை 28}ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 17}ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் சாந்தாராம் நாயக்கால் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.