/

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் கடந்த பல மாதங்களாக பொறுப்பு ஆளுநர்களே உள்ளனர். மேலும், ஆந்திரம், தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள இ.எஸ்.எல். நரசிம்மன் கடந்த 2 ஆண்டுகளாக பதவி நீட்டிப்பில் உள்ளார்.
இந்நிலையில், 5 மாநிலங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, மகாராஷ்டிர ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதேபோல, மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பை குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலியும், மேகாலய ஆளுநர் பொறுப்பை அஸ்ஸாம் ஆளுநர் பன்வாரிலாலும், அருணாசலப் பிரதேச ஆளுநர் பொறுப்பை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யாவும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.