அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இனி அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தல் ஆணையம் தகவல்! 

இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய ..

News image
Updated On :12 மே 2017, 2:30 pm

DIN

புதுதில்லி: இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, அவற்றில் மாற்றம் செய்து தேர்தல்ம முடிவுகளில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அவர்களின் இந்த கருத்தினை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்தும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் தில்லியில் இன்று ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த  கூட்டத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 7 தேசிய கட்சிகள் மற்றும் 35 பிராந்திய கட்சிகள் கலந்துக் கொண்டன.

கூட்டத்தின் முடிவில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே தேர்தல் ஆணையம் இயந்திரங்களை வாங்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் நிதியும் பெற்று உள்ளது.  இதற்கிடையே மின்னணு ஓட்டு எந்திரங்களை 'ஹேக்கிங்' செய்ய முடியும் என குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள் அதனை செய்துக்காட்டவும் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில்  தேர்தல்களில் இத்தகைய  இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.