டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேஜஸ் விமானம் மூலம் வெற்றிகரமாக ஏவுகணைச் சோதனை

"தேஜஸ்' போர் விமானம் மூலமாக விண்ணில் உள்ள இலக்குகளை அழித்து தாக்கும் ஏவுகணைச் சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

News image
Updated On :12 மே 2017, 7:09 pm

DIN

"தேஜஸ்' போர் விமானம் மூலமாக விண்ணில் உள்ள இலக்குகளை அழித்து தாக்கும் ஏவுகணைச் சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
"தேஜஸ்' போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணையானது மற்ற ஏவுகணையை போல் அல்லாமல் இலக்குகளை நீண்ட தொலைவிலிருந்தும் தாக்கக் கூடியது.
போர்க்காலங்களில் எதிரி நாடுகளின் விமானங்களை நீண்ட தொலைவிலிருந்தும் பின்தொடர்ந்து சென்று தாக்கக் கூடிய வகையில் நவீன சென்சார் கருவிகள் இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த ஏவுகணைச் சோதனையானது ஒடிஸா மாநிலம், சண்டீபூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. அப்போது, சோதனைக்காக பறக்கவிடப்பட்ட சிறிய ரக விமானத்தை நீண்ட தொலைவுக்கு அப்பால் வந்த தேஜஸ் விமானத்திலிருந்து புறப்பட்ட ஏவுகணை தாக்கி அழித்தது.
இந்த ஏவுகணைச் சோதனை வெற்றியானது, இந்திய விமானப் படையின் நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.