கான்பூர்: உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தன்னுடைய 102-வயது மாமியாருக்கு, 80-வயது மருமகள் அன்னையர் தின பரிசாக, தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனா. இவரது வயது 80. இவருடைய மாமியாருக்கு வயது 102. அன்னையர் தினமான நேற்று சாந்தனா தன்னுடைய மாமியருக்கு ஒரு எதிர்பாராத பரிசினை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்ற தனது மாமியாருக்கு கால் தடுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவருக்கு உதவவும் வகையில் வீட்டிலேயே கழிப்பறை கட்ட சாந்தனா முடிவெடுத்துள்ளார்.இதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகளை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து சரியான உதவிகள்கிடைக்கவில்லை .
ஆனால் தன்னுடைய எண்ணத்தில் தளராத சாந்தனா கழிப்பறை கட்டுவதற்காக தான் வளர்த்து வந்த 5 ஆடுகளை விற்று பணம் திரட்டினார். அதனைக் கொண்டு தன் மாமியாருக்கு ஒரு கழிப்பறையை கட்டியுள்ளார்.
அன்னையர் தின பரிசாக அவரது இந்த முயற்சியானது மனதினைநெகிழ்ச்சி செய்வதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

பழனியில் ஒருவா் கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


