லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் பிரச்னைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 மே 2017, 11:23 pm

DIN

காஷ்மீர் பிரச்னைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் பெல்லிங் நகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காஷ்மீரில் பிரச்னையைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. எனினும், எங்களது அரசு காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும். காஷ்மீர் நமக்குச் சொந்தமானது; காஷ்மீரிகள் நமக்குச் சொந்தமானவர்கள்; காஷ்மீர் பண்பாடு நமக்குச் சொந்தமானது. அங்கு ஏற்படும் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்போம்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளும் என்று நம்புவோம். அவ்வாறு திருத்திக்கொள்ளாவிட்டால், நாம்தான் அவர்களைத் திருத்த வேண்டியிருக்கும். உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை மற்றொரு நாடு குலைப்பது சாத்தியம் கிடையாது. காரணம், அவ்வாறு செய்வதை சர்வதேச சமுதாயம் அனுமதிக்காது என்றார் அவர்.
முன்னதாக, காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த மாதம் (ஏப்ரல்) 9-ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறையில் 8 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தத் தேர்தலில் வெறும் 7.14 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
மேலும், காஷ்மீரில் அபாயகரமான சூழல் நிலவுவதால் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது. இத்தகைய பதற்றமான சூழலில், காஷ்மீர் பிரச்னை குறித்து ராஜ்நாத் சிங் இவ்வாறு நம்பிக்கையுடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலம் வந்துள்ள ராஜ்நாத் சிங், அந்த மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம், வளர்ச்சிப் பணிகள், சீன எல்லைக் கண்காணிப்பு ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், திபெத், சீனா, நேபாள ஆகிய நாடுகளுடனான நமது எல்லைகளைக் காவல் காக்கும் படையினரின் நிலைகளுக்குச் சென்று அவர் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.