அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவர்கள்: விமான பணிப்பெண் அளித்த தண்டனை என்ன தெரியுமா? (விடியோ இணைப்பு)  

குடிபோதையில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவரை விமான பணிப் பெண் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2017, 12:45 pm

DIN

ஐதராபாத்: குடிபோதையில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவரை விமான பணிப் பெண் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன பணிப் பெண் ஒருவர் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு குடிபோதையில் இருந்த இரு இளைஞர்கள் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பெண்ணின் உதவிக்குரல் கேட்டு அங்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் அவ்விரு  இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அப்பெனிடம் தொடர்ந்து மன்னிப்பு   கோரினர். அவர்களின் நடத்தையால் கோபத்துடன் காணப்பட்ட அந்தப்பெண், அவ்விரு இளைஞர்களையும் தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தினார்.

பின்னர் காவல் நிலையத்தில் மாணவர் அந்த விமான பணிப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.ஆனால் இளைஞர்கள் இருவரும் மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது அந்தப் பெண் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. 

இருந்த போதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த புகாரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விடியோ: 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.