இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஷீரடி விமான நிலையத்துக்கு விரைவில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் விரைவில் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:29 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் விரைவில் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
அகமது நகர் மாவட்டம், ஷீரடியில் புகழ்பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. அந்த நகரில் கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த 1-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
நாட்டில் உள்ள 59 விமான நிலையங்களிலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஷீரடியில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவார்கள் என்பதாலும், புகழ்பெற்ற ஆன்மிக தலம் இருப்பதாலும் பயங்கரவாத அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, சிஐஎஸ்எஃப் பாதுகாப்பின் கீழ் விரைவில் ஷீரடி விமான நிலையமும் கொண்டு வரப்பட உள்ளது.
ஷீரடி விமான நிலையத்துக்கு விரைவில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அதன் பொது இயக்குநர் ஓ.பி.சிங் தெரிவித்தார். ஷீரடி கோயிலுக்கு தினமும் சுமார் 60ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் அமைந்துள்ள இஸ்ரோவின் ஐஎஸ்டிஆர்ஏசி அமைப்பை தமது பாதுகாப்பின் கீழ் சிஐஎஸ்எஃப் புதன்கிழமை கொண்டுவந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.