புது தில்லி: காவிரி வழக்கில், ஆஜராக காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
காவிரி நதிநீர் வழக்கில், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன், தமிழக அரசு சார்பில் வாதிடுவார் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
காவிரி வழக்கில் மாநில அரசுகளின் சார்பில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, காவிரி வழக்கில் தொழில்நுட்பரீதியான வாதங்களை முன் வைக்க சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.