திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநிலங்களவையில் தவறான தகவல் வெளியீடு: திருத்தம் செய்த வெங்கய்ய நாயுடு

ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவற்றப்பட்டுவிட்டதாக மாநிலங்களவையில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 1:06 am IST

ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவற்றப்பட்டுவிட்டதாக மாநிலங்களவையில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவைக் குறிப்பில் இடம்பெற்றிருந்த அதுதொடர்பான தகவல்களை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திருத்தம் செய்தார். ஊழல் தடுப்பு மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் இருந்த சில அம்சங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 
அதைத் தொடர்ந்து பரிசீலனைக் குழுவின் பார்வைக்கும் அந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 4 ஆம் தேதி அது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியால் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் இதுதொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை ஒழுங்கு பிரச்னை எழுப்பினார். குரியன் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமன்றி, மத்திய அமைச்சர்கள் சிலரும் இதேபோன்று தவறான தகவல்களைத் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, அவரது கோரிக்கையைப் பரிசீலித்த குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, அவையில் இதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது என்றும் ஊழல் தடுப்பு மசோதா மக்களவையில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், அவைக் குறிப்பில் அதுதொடர்பாக தவறாக இடம்பெற்றிருந்த தகவலையும் அவர் திருத்தியமைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.