ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
எத்தனைதான் விதிமுறைகள் இருந்தாலும், அபராதம் விதித்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் ஏராளம்.


எத்தனைதான் விதிமுறைகள் இருந்தாலும், அபராதம் விதித்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் ஏராளம்.
அப்படியே சிலர் ஹெல்மெட் வாங்கினாலும், தங்களது தலைகளுக்குப் போடாமல் வாகனத்தின் ஹேண்ட்பார்களுக்குப் போட்டிருப்பார்கள்.
உயிருக்கு பயந்து அல்லாமல், டிராபிக் போலீஸுக்குப் பயந்து ஹெல்மெட் போடுவோரும் உண்டு.
மேற்சொன்னவர்களில் எந்த வகையிலும் இல்லாமல், ஹைதராபாத் இளைஞர் ஹெல்மெட் அணியாமல், தனது வாகனத்தின் மட்கார்டில் இப்படி எழுதியும் உள்ளார்.
அதாவது, 'ஹெல்மெட் அணியவில்லை. நானும் மற்ற மனிதரைப் போல மரணிப்பேன்' என்று பதிவு செய்திருந்தார்.
இதனை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்ட ஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறையினர், சரியான கமெண்டையும் போட்டுள்ளனர். அதில், எங்களை மன்னித்துவிடுங்கள் கிருஷ்ணா ரெட்டி சார். உங்களை நாங்கள் சாக விடமாட்டோம். மற்ற சக மனிதர்களைப் போல நீங்கள் வாழ்வதை பார்ப்போம். தயவுகூர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்குங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல, இந்த வாகன ஓட்டுநரின் வரலாறையும் போக்குவரத்துக் காவலர்கள் புரட்டியுள்ளனர். அதில், இவர் மீது அபராதம் கட்டுவதற்கான 10 செல்லான்கள் நிலுவையில் உள்ளதும், இதில் 7 செல்லான்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காகவும் பதிவாகியுள்ளது.
விதிகளை மீறுவோருக்கு இப்படி நகைச்சுவையாக அறிவுரைக் கூற விரும்புகிறோம். மக்களும், போக்குவரத்துக் காவல்துறையினர் தோழமையுடன் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...