கெய்ரின்: கனமழை காரணமாக திபெத்தில் சாலை துண்டிக்கப்பட்டு 90 தமிழர்கள் உட்பட 150 இந்திய யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கைலாஷ் யாத்திரைக்காக 150 பேர் கொண்ட யாத்ரீகர்கள் குழு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. அவர்களில் 90 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 60 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
தற்பொழுது அவர்கள் திபெத்தின் கெய்ரின் பகுதியில் தங்கி உள்ளார்கள். அங்கு பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு அவர்கள் உணவு, குடிநீர் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே அவர்களை மீட்க உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்