கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாதா?: நிதி அமைச்சகம் விளக்கம் 

செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 8:56 am

DIN

புது தில்லி: செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும், இதனால் ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவியது. அதாவது செப்டம்பர் 2 முதல் 5 வரையிலும் பின்னர் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் 3 திங்கள் அன்று ஜன்மாஷ்டமி விடுமுறை. இருப்பினும் தில்லி மும்பையில் உள்ள வங்கிகள் திறந்திருக்கும். செப்டம்பர் 4-5 ஆகிய நாட்களில் பி.எஃப் மற்றும் ஓய்வூதிய பிரச்சனையை முன்வைத்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது.

மேலும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை என்பதால், அது வழக்கமான விடுமுறை ஆகிறது. அந்த நாட்களில் கூட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது.

அத்துடன் ஏடிஎம்களில் இருந்து மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான பணத்தை நிரப்புமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. எனவே இதர நாட்களில் வங்கிகள் செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.