ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
எதிர்கட்சிகளின் கூட்டத்தின் மத்தியில் தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது தெரியவந்தது. ஏனெனில் இனியும் அவரால் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. மத்திய அரசு தனது சொந்த தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியை தன்வசப்படுத்த நினைப்பது தேச விரோத நடவடிக்கை ஆகும். தற்போது மத்திய அரசின் இந்த சர்வாதிகார முறைக்கு பலர் இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருவது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளான ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை தற்போதைய பாஜக ஆட்சியால் சீரழிந்து வருகின்றன. எனவே அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


