குழந்தை விற்கும் 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாள் குழந்தையும், தாயும் மீட்கப்பட்டனர்.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே மல்கஜ்கிரி எனும் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கு குழந்தைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரகசிய சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தை இல்லாத தம்பதிகளிடம் பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளை விற்று வந்த 4 பேர் கும்பல் செவ்வாய்கிழமை பிடிபட்டனர். மேலும் அந்த கும்பலிடம் இருந்து 2 நாள் குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் மீட்கப்பட்டனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் எனும் பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவரின் கார் ஓட்டுநர் சையது ஷானவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் முகமது இப்ராஹிம், ஹரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!

ஆடி அமாவாசை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

ஆடி அமாவாசை: சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்தார் ரொனால்டோ!
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



