குழந்தை விற்கும் 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாள் குழந்தையும், தாயும் மீட்கப்பட்டனர்.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே மல்கஜ்கிரி எனும் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கு குழந்தைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரகசிய சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தை இல்லாத தம்பதிகளிடம் பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளை விற்று வந்த 4 பேர் கும்பல் செவ்வாய்கிழமை பிடிபட்டனர். மேலும் அந்த கும்பலிடம் இருந்து 2 நாள் குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் மீட்கப்பட்டனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் எனும் பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவரின் கார் ஓட்டுநர் சையது ஷானவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் முகமது இப்ராஹிம், ஹரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


