ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினிகோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பகுதியில் பயங்கர காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது.
பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, கட்ரினிகோனா, தல்லரேவு, மல்கிபூரம் ஆகிய பகுதிகளில் 85 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலும் பயங்கர வேகத்தில் காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெய்ட்டி புயல் பாதிப்பு காரணமாக விஜயவாடா மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை மேலும் 4-ஆக அதிகரித்தது. நிலத்தில் தேங்கியிருந்த வெள்ள நீரை சீர்செய்ய சென்ற விவசாயி, சாலையில் விழுந்திருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கடுங்குளிர் காரணமாக இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

