மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி கிண்டல் செய்த பொதுமக்கள் 

தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி பொதுமக்கள் கிண்டல் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

News image
Updated On :28 டிசம்பர் 2018, 3:09 pm IST

புது தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி பொதுமக்கள் கிண்டல் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் ஒன்பது திட்டங்களை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால், துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நாள்பட்ட இருமல் நோயால் அவதிப்பட்டு வரும் அரவிந்த் கேஜரிவால் கூட்டங்களில் பேசும்போது பேச்சின் இடையிடையே தொடர்ந்து இருமும் வழக்கம் உள்ளவர். 

இந்நிலையில் கேஜரிவால் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அவரைப் போலவே இருமிக் காட்டி பொதுமக்கள் கிண்டல் செய்த சம்பவம் நடந்துள்ளது.   

கேஜரிவால் பேசிக்கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் பக்கமிருந்து சிலர்,  கூட்டங்களில் பேசும்போது பேச்சின் இடையிடையே கேஜரிவால் தொடர்ந்து இருமுவது போல தொடந்து போல் சத்தமுடன் பாவனை செய்தனர். இதன் காரணமாக  அங்கு சலசலப்பு உண்டானது.    

கூட்டத்தினர் அமைதி காக்குமாறு கேஜரிவால் விடுத்த வேண்டுகோளை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே மத்திய அமைச்சர் கட்கரி எழுந்து மைக்கில், 'இது அரசு விழா; கொஞ்சம் அமைதியாகி இருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் கூட்டம் அமைதியானது. 

பின்னர் கேஜரிவால் பேசும்போது கட்கரியை பாராட்டிப் பேசினார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.