திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

துப்பாக்கி முனையில் பணம் திருடிய கொள்ளையன்: திடுக்கிடும் சிசிடிவி விடியோ வெளியீடு

துப்பாக்கி முனையில் குழந்தையை மிரட்டி தந்தையிடமிருந்து முகமுடி கொள்ளையன் பணம் திருடும் திடுக்கிடும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2018, 11:26 am

இந்தூரில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரவு சுமார் 8:30 மணியளவில் பணம் எடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த முகமுடி அணிந்த கொள்ளையன் ஒருவன் அந்த நபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை திருடுகிறான். மேலும், அந்த நபரின் குழந்தையின் மீது துப்பாக்கி வைத்து மிரட்டி வங்கிக் கணக்கில் மீதமிருக்கும் பணத்தையும் எடுத்து தர மிரட்டுகிறான்.

உடனே அந்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் மீதிப் பணத்தையும் எடுத்து தருகிறார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஜனவரி 24-ம் தேதி நடந்த அந்த திருட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.