குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நீட் எழுதிய மாணவர்களின் தகவல் கசிவா?: ராகுல் புகாருக்கு சிபிஎஸ்சி மறுப்பு 

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :24 ஜூலை 2018, 1:25 pm

DIN

புது தில்லி: நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள், இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சிபிஎஸ்இக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.    

சிபிஎஸ்இ நிர்வாகி அனிதா கர்வாலுக்கு ராகுல் எழுதியிருக்கும் கடிதத்தில், இதுபோன்ற தகவல்களைப் பாதுகாக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வெழுதிய சுமார் 2 லட்சம் மாணவர்களின் பெயர், செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவை சில இணையதளங்களில் பணத்துக்காக விற்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து ராகுல் எழுதியிருக்கும் கடிதத்தில், இந்த செய்தி அறிந்து தான் கடும் அதிர்ச்சியடைந்தேன். நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற தகவல்களை பாதுகாக்க, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் விற்கப்படவில்லை. இணையதளங்களில் பணத்துக்கு தகவல்கள் விற்கப்பட்டதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களனைத்தும் தேசிய தகவல் மையத்தில் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.