தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ராணுவ வீரர்களின் சீருடைகளை அவர்களே வாங்க வேண்டியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராணுவ வீரர்கள் சீருடைகளை தங்கள் சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது என்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 7:32 pm

DIN

ராணுவ வீரர்கள் சீருடைகளை தங்கள் சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது என்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், இந்தியாவில் தயாரிப்போம் என்று வெற்றி வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அதேவேளையில், நமது ராணுவ வீரர்கள் அவர்களின் சீருடைகளையும், காலணிகளையும் அவர்களே வாங்க வேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயுதங்களை 50 சதவீதமாகக் குறைக்கலாம் என்று இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளதாகவும், இதனால், ராணுவ வீரர்களுக்கான உடைகள், காலணிகள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட மாட்டாது என்பது ஊடகச் செய்திகளில் வெளியாகியுள்ளது. இதனால், வீரர்கள் ராணுவ உடைகளையும், காலணிகளையும் பொதுச் சந்தையில் விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.