அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆம் ஆத்மியின் அடுத்த நகர்வு: நேரம் ஒதுக்குவாரா குடியரசுத் தலைவர்?

தில்லியில் நிகழும் சூழல் குறித்து விளக்கம் தர குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்குமாறு ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் புதன்கிழமைகடிதம் அனுப்பியுள்ளார்.

News image
Updated On :13 ஜூன் 2018, 12:21 pm

DIN

தில்லியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசு உயர் அதிகாரிகளை உடனடியாகப் பணிக்குத் திரும்ப உத்தரவிடக் கோரி, தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) நீடிக்கிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் குடியரசுத் தலைவருக்கு நேரம் ஒதுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில்,

"முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின் மற்றும் கோபால் ராய் கடந்த 3 நாட்களாக சத்யாகிரஹா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்காக துணைநிலை ஆளுநர் 3 நிமிடங்கள் கூட ஒதுக்கவில்லை. 3 மக்களவை உறுப்பினர்களுடன் நானும் சந்திக்க முறையிட்டேன். ஆனால், எங்களுக்கும் அவர் நேரம் ஒதுக்கவில்லை.

நானும், தில்லி மற்றும் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து தில்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை குறித்து முறையிடப்போகிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.