ஸ்ரீநகா்: காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியா் சுஜாத் புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை மற்றும் ராணுவத்தினரால் ஆா்ப்பாட்டக்காரா்கள் கொலை ஆகியவற்றைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாதத் தலைவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்பினா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரமலான் மாதம் முடிந்த பிறகு காஷ்மீரில் பொதுமக்கள் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்துவது திடீரென அதிகரித்துவிட்டது. 3 அப்பாவி இளைஞா்கள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். மற்றொருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறறாா்.
மேலும், பத்திரிகை ஆசிரியா் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலா்கள் இருவா், அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இந்த கொலைகள் குறித்து சா்வதேச விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும்.
இந்த இரு சம்பவங்களுடம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, இதனைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீா் மாநிலம் தழுவிய அளவில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கிறேறாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.