பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய எம்.எல்.ஏ.,: என்ன காரணம் தெரியுமா? 

சுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பயத்தினை போக்குவதற்காக, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி  எம்.எல்.ஏ ஒருவர்  சுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Published On :

ஹைதராபாத்: சுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பயத்தினை போக்குவதற்காக, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி  எம்.எல்.ஏ ஒருவர்  சுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி  எம்.எல்.ஏவாக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. இவர் பாலகோல் நகரத்தில் மோசமான நிலையில் உள்ள சுடுகாடு ஒன்றில் பூங்கா, கழிப்பறை மற்றும்  குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த விரும்பினார். அதற்காக பல்வறு ஒப்பந்தக்காரர்களை அணுகினார். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை.

இறுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒப்பந்தக்காரர் ஒருவர் சம்மதித்து பணிகள் துவங்கின. ஆனால் அங்கு பேய் இருப்பதாக பணிபுரிந்த தொழிலாளர்கள் அஞ்சியதால் பணிகள் தடைப்பட்டு இருந்தன. எனவே அவர்களின் பயத்தினை போக்குவதற்காக நிம்மல ராவே அங்கு ஒர் இரவு தங்குவதாக முடிவெடுத்தார்.  

அதன்படி நிம்மல ராம நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் படுத்து தூங்கியுள்ளார். வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு சுடுகாட்டிற்கு சென்றவர், அங்கு கட்டில் ஒன்றை போட்டு படுத்து உறங்கியுள்ளார். அத்துடன் சனிக்கிழமை காலை அங்கு வந்த தொழிலாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் நம்பும் பொருட்டு இன்னும் சில இரவுகளையும் அங்கு செலவழிக்கத் தயராக இருப்பதாக உறுதி அளித்தார்.

எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடுவின் இந்த செயலை, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் பாராட்டி உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ராம நாயுடுவின் இந்த முயற்சிகள் வெறுமனே ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல  அற்பமான சடங்குகள் மற்றும் பரவலான மூடநம்பிக்கைக்கு   எதிரான அவரது இந்த போராட்டம் தேசிய கவனத்தை ஈர்க்க வேண்டும்' எனது தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.