வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 7:48 pm

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், தில்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், இரு முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி பாஸ்கர ராமன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'இந்த வழக்கில், பாஸ்கர ராமனை மேற்கொண்டு சிறையில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை' என்று வாதிட்டார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான உத்தரவை மார்ச் 7-ஆம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம் முறைகேடான வழிகளில் சேர்த்த சொத்துகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்குவதற்கு ஆடிட்டர் பாஸ்கர ராமன் உதவி செய்து வந்தது தங்களது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.