அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைப்பு !   

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உடைக்கப்பட்டிருப்பது பதற்றத்தை உண்டாகியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:25 pm

DIN

மாவனா: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உடைக்கப்பட்டிருப்பது பதற்றத்தை உண்டாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 25 ஆண்டு காலமாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளின் கைவசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது.

உடனடியாக அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான லெனின் அவர்களின்  இரண்டு சிலைகள் அகற்றப்பட்டன. இது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களால் செவ்வாய் அன்று இரவு சேதப்படுத்தப்பட்டது.

அதேபோல கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை செவ்வாய் இரவுசேதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உடைக்கப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை உண்டாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ளது மாவனா என்னும் பகுதி. இங்கு அமைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர் அம்பேத்கரின் சிலையிலானது புதனன்று அதிகாலை அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது 

காலை இது பற்றிய தகவல் தெரிய வந்ததும் அப்பகுதி தலித் மக்கள் பெருமளவில் கூடி போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கு வந்து சேர்ந்த அதிகாரிகள் சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில்  புதிய சிலை அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.