

பெங்களூர்: கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 37 வயதாகும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
6 மாதங்களுக்கு முன்பு கௌரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுப் படையினர், நவீன்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.
பிப்ரவரி 17ம் தேதி சட்டத்துக்குப் புறம்பாக துப்பாக்கிக் குண்டுகள் வைத்திருந்த குற்றத்துக்காக காவல்துறையினரிடம் பிடிபட்ட நவீன் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்மகலூர் மாவட்டத்தின் பிரூர் நகரைச் சேர்ந்தவர் நவீன் குமார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.