இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

இந்திய பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது பங்களிப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read


புது தில்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது பங்களிப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, அங்கு தங்களது தனித்திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பலதரப்பட்ட சூழ்நிலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து பெண்கள் சாதித்து வருவது பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். ஆயுதப் பிரிவுகளில் பெண்களின் நியமனம் அதிக அளவில் செய்யப்பட்டு, நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com