புது தில்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது பங்களிப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, அங்கு தங்களது தனித்திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பலதரப்பட்ட சூழ்நிலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து பெண்கள் சாதித்து வருவது பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். ஆயுதப் பிரிவுகளில் பெண்களின் நியமனம் அதிக அளவில் செய்யப்பட்டு, நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம்!

அரக்கோணம் - திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


