தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் சூடாக பதில்! 

காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது  தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

News image
Updated On :18 மார்ச் 2018, 1:53 pm

DIN

புதுதில்லி: காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது  தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் ஞாயிறன்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியினை அவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அத்துடன் அவர் தனது பேச்சில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது  தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி எப்போது நீதியின் பாதுகாவலராக மாறியது என்று தெரியவில்லை. நீதி தனக்கு எதிராக சென்றதும் இந்திரா காந்தி எப்படி செயல்பட்டார் என்பதை நாம் நினைவுப்படுத்த முடியும்.

1988-ம் ஆண்டு பிரஸ் மசோதா கொண்டுவரப்பட்டது, அப்போது மீடியாக்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்பட்டது? இந்திரா காந்தி மீடியாக்களை முழுவதும் இருட்டடிப்பு செய்தார். இப்போது அவருடைய பேரன் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து பேசுகிறார்.

இது தேர்தல் நேரம் என்பதால் விவசாயிகள் நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தி பேசுகிறார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக வாக்கை மட்டும் பார்க்கிறார்கள்.கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை.

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரட்டை இலக்கில் வளர்ச்சி உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் நிலை என்ன?

கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுருக்கமாக தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.