அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாஜக பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை இல்லாததால் பெண் வழக்கறிஞரின் வினோத போராட்டம் 

பாஜக பிரமுகர் மீதான் பாலியல் வன்கொடுமை புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:59 pm

DIN

லக்னௌ: பாஜக பிரமுகர் மீதான் பாலியல் வன்கொடுமை புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை, மூத்த வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான சதீஷ் ஷர்மா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பெண் வழக்கறிஞரை மூன்று ஆண்டுகளாக மனரீதியாக அவர் துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்தப் பெண் வழக்கறிஞர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலையை மொட்டை அடித்துக் கொண்ட பெண் வழக்கறிஞர் கூறியதாவது:

மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க பிரமுகருமான சதீஷ் ஷர்மா என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை மனரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார். மேலும், என்னை ஆபாசமாக அவர் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்தார்.

அவர் மிகப்பெரிய தலைவராக இருப்பதால் அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனது குடும்பத்தினரை மிரட்டுகிறார்.நான் ஒரு தலித்தாக இருப்பதனால்தான் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது.

காசிப்பூர் காவல்நிலையத்தில் சதீஷ் ஷர்மா மீது புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னிடம் ஏதாவது காரணங்கள் கூறி சமாளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.