மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஒடிசா சண்டிபூர் கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகர பரிசோதனை 

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றான இந்தியாவின் பிரமோஸ் ஒடிசா சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :21 மே 2018, 11:34 am

பாலசோர்: உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றான இந்தியாவின் பிரமோஸ் ஒடிசா சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றாக இந்தியாவின் பிரமோஸ் உருவாக்கப்பட்டுள்ளது.  சாதாரணமாக இதன் வாழ்நாள் 10 வருடங்கள் ஆகும். அதற்பொழுது அது 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஏவுகணை தயாரிப்புக்கு ஆகும் செலவு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணையின் வாழ்நாள் நீட்டிப்பிற்கு பின் இந்தியாவில் முதன்முறையாக சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.   

முதல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரமோஸ் ஏவுகணை குழு மற்றும் டி.ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.