பாலசோர்: உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றான இந்தியாவின் பிரமோஸ் ஒடிசா சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.
உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றாக இந்தியாவின் பிரமோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இதன் வாழ்நாள் 10 வருடங்கள் ஆகும். அதற்பொழுது அது 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏவுகணை தயாரிப்புக்கு ஆகும் செலவு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவுகணையின் வாழ்நாள் நீட்டிப்பிற்கு பின் இந்தியாவில் முதன்முறையாக சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.
முதல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரமோஸ் ஏவுகணை குழு மற்றும் டி.ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

இந்த நாள் யாருக்கு சாதகம்! தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (29 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் மிதுன ராசிக்கு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


