பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் பண்டாரு வைஷ்ணவ் மரணம் அடைந்தார்.
பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read


முன்னாள் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் பண்டாரு வைஷ்ணவ் மரணம் அடைந்தார்.

பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன், பண்டாரு வைஷ்ணவ் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் உள்ளது வீட்டில், நேற்று தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள குருநானகா கேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இரவு 12.30 மணிக்கு உயிரிழந்தார். 

பண்டாரு வைஷ்ணவ் கடுமையான மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com