தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மே 30, 31-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஊதிய உயர்வு அளிக்க வலியுறுத்தி, வரும் 30, 31-ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுத் துறை வங்கிகளின் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :25 மே 2018, 1:37 am IST

ஊதிய உயர்வு அளிக்க வலியுறுத்தி, வரும் 30, 31-ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுத் துறை வங்கிகளின் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், வங்கி அலுவலர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது. ஆனால், அந்தப் பரிந்துரையை வங்கி அலுவலர்கள் சங்கம் ஏற்கவில்லை. இதுகுறித்து வங்கிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இதற்கு முன், கடந்த நவம்பர் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கம் அளித்திருக்கும் பரிந்துரை போதுமானதாக இல்லை. எனவே, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ள கோட்டை முன், வரும் 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதைத் தொடர்ந்து, 30, 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.