மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சானிட்டரி நேப்கின் வீசி எறிந்தது யார்?: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்திய கொடூரம் 

பள்ளிக் கழிவறையில் சானிட்டரி நேப்கின் வீசி எறிந்தது யார் எனபதைக் கண்டறிய மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனைநடத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :4 நவம்பர் 2018, 10:58 am

DIN

சண்டிகர்:  பள்ளிக் கழிவறையில் சானிட்டரி நேப்கின் வீசி எறிந்தது யார் எனபதைக் கண்டறிய மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனைநடத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தின் ஃபாசில்கா மாவட்டத்தில் குந்தால் என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசுப்பள்ளியில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. அந்தப் பள்ளியின் கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டு கிடந்துள்ளது. இதைக் கண்ட ஆசிரியர்கள் அந்த சானிட்டரி நேப்கினை வீசி எறிந்தது யார் என்பதைக் கண்டறிவதற்காக சில மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி நேப்கின் அணிந்திருக்கிறார்கள் என்று சோதனை நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான விடியோ க்ளிப் ஒன்றும் வெளியானது. இதனால் மாணவிகள் அவமானம் தாங்க முடியாமல் அழுதபடியே தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

விஷயம் பெரிய அளவில் பரவியதால் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்  உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் 2 ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
   
மாநில கல்வித்துறை செயலாளர் கிருஷன் குமார் திங்கள் கிழமைக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம்  உறுதியளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.