மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை..

News image
Updated On :11 நவம்பர் 2018, 3:17 pm

DIN


மத்திய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை என்ற நிலையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது ஏன்? என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தனது  ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகள், 6 மாதத்தை நிறைவு செய்துவிட்டது. அதன் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதித் தேவைகள் ஏதும் இல்லை என்ற நிலையில், ரிசா்வ் வங்கியின் மூலதன வரைவுத் திட்டத்தை நிர்ணயிக்க மத்திய அரசு இத்தனை அழுத்தம் கொடுப்பது ஏன்?

Story image

 கடந்த 4 ஆண்டுகளாக ஏன் மத்திய அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்தது? நடப்பு நிதி நிலை சரியான வகையில் இருப்பதாகவும், 2018-19 காலகட்டத்துக்கான ரூ.70 ஆயிரம் கோடி கடனை விட்டுக் கொடுத்ததாகவும் மத்திய அரசு பெருமிதம் தெரிவிக்கிறது. 

அப்படியானால், ரிசா்வ் வங்கியின் ரொக்க இருப்பிலிருந்து மத்திய அரசுக்கு ஏன் நிதி தேவைப்படுகிறது? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றறம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.