தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு 

தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது 

Published On :

புது தில்லி: தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது 

அடிப்படையில் இந்திய வனத்துறை சேவை (ஐ.எப்.எஸ்)  அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணியாற்றியுள்ளார். ஓய்வுக்கு பிறகு அவர் தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். 

இவர் சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் மீது பெறப்பட்ட ஊழல் புகார்கள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் அந்தத் தகவலை அளிக்க மறுத்து பதில் அனுப்பியது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சதுர்வேதிக்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களுக்கு எதிராகவும், துறை சார் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஏராளமான புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வருகின்றன. ஆனால் இந்தப் புகார்கள் எல்லாம் பெரும்பாலும் முகவரி இல்லாத, ஆதாரமில்லாத புகார்களாகும். 

வந்து சேரும் இத்தகைய இந்தப் புகார்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மையைப் பார்த்தும், அதற்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்தப் புகார்கள் மீது தேவையான அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தப் புகார் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது தனிப்பட்ட ரீதியிலும் ஊழல் சார்ந்தும் கலந்து வருகின்றன. ஆனால், மனுதாரர் தனது மனுவில் அமைச்சர்கள் மீதான ஊழல் தொடர்பான புகார்கள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்டுள்ளார். இவ்வாறு ஒவ்வொரு புகாரையும் கண்டுபிடித்து, ஆய்வு செய்து ஊழல் குறித்த புகார்களை மட்டும் பிரித்தெடுப்பது என்பது தனிப்பட்ட நபர் சார்ந்த பணியாக மாறிவிடும். 

இத்தகைய பணிகள் அரசு அலுவலகத்தின் வழக்கமான பணிகளில் இருந்து திசைமாற்றிவிடும் என்பதால், மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வழங்க இயலாது.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.