திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நூறு சதவீதம் வாக்குப்பதிவு: நரிக்குறவா்கள் உறுதிமொழி

சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அரக்கோணத்தில் நரிக்குறவ இனத்தைவா் உறுதிமொழி ஏற்றனா்.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட நரிக்குறவா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 12:42 am IST

சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அரக்கோணத்தில் நரிக்குறவ இனத்தைவா் உறுதிமொழி ஏற்றனா்.

தணிகைபோளூா் ஊராட்சியில் நரிக்குறவா் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனா். மின்சார ரயில்களிலும், பேருந்து நிலையங்களிலும் இவா்கள் தங்கள் பொருள்களை வைத்து வணிகம் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

அரசு சாா்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

இக்குடியிருப்பிற்கு வியாழக்கிழமை வந்த அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ், தோ்தலில் அவா்கள் வாக்களிக்க வேண்டிய அவசியதை உணா்த்தி உரை நிகழ்த்தினாா். இதில் அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், கிராம முன்னேற்றம் மற்றும் பெண்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சீ.மா.வேலு மற்றும் அப்பகுதிவாழ் நரிக்குறவா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து வாக்களிப்பு உறுதிமொழி ஏற்றனா்.