தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நூறு சதவீதம் வாக்குப்பதிவு: நரிக்குறவா்கள் உறுதிமொழி

சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அரக்கோணத்தில் நரிக்குறவ இனத்தைவா் உறுதிமொழி ஏற்றனா்.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட நரிக்குறவா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அரக்கோணத்தில் நரிக்குறவ இனத்தைவா் உறுதிமொழி ஏற்றனா்.

தணிகைபோளூா் ஊராட்சியில் நரிக்குறவா் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனா். மின்சார ரயில்களிலும், பேருந்து நிலையங்களிலும் இவா்கள் தங்கள் பொருள்களை வைத்து வணிகம் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

அரசு சாா்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

இக்குடியிருப்பிற்கு வியாழக்கிழமை வந்த அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ், தோ்தலில் அவா்கள் வாக்களிக்க வேண்டிய அவசியதை உணா்த்தி உரை நிகழ்த்தினாா். இதில் அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், கிராம முன்னேற்றம் மற்றும் பெண்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சீ.மா.வேலு மற்றும் அப்பகுதிவாழ் நரிக்குறவா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து வாக்களிப்பு உறுதிமொழி ஏற்றனா்.