உத்தரப்பிரதேச அரசு மீது நம்பிக்கை உள்ளது: ஆப்பிள் நிறுவன ஊழியரின் குடும்பத்தினர்
காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.


லக்னௌ: காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவேக் திவாரியின் (38) மனைவி கல்பனா திவாரி, மாநில அரசின் மீது நம்பிக்கை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது முதல்வரை சந்தித்தப் பிறகு அந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. மிகத் துயரமான சம்பவம் நடந்த போது அதை தாங்கும் சக்தியே இல்லை. தற்போதுதான் சுய உணர்வே திரும்பியது. எனது கணவர் விட்டுச் சென்ற பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் எனக் கூறினார்.
கடந்த செப்டம்பர் 29ம் தேதி, கோம்தி நகர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காரை நிறுத்தச் சொன்ன போது நிறுத்தாமல் சென்ற விவேக் திவாரி மீது காவலர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.
அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் விவேக் திவாரியின் தாய் பெயரில் தலா ரூ.5 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை, கல்பனா திவாரிக்கு அரசு வேலை உள்ளிட்டவை அளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...