பம்பை: சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகத் புதனன்று திறக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பம்பை அடிவார முகாம் பகுதியில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிலக்கல் பகுதியில் ஆங்கில ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சரிதா மற்றும் பூஜா ஆகியோர் போராட்டம் பற்றிய செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூஜா வந்திருந்த வாகனத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்கினர். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவருடன் வந்திருந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல் பேருந்து ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சரிதா என்ற மற்றொரு ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றைச் சேர்ந்த சரிதா என்று பத்திரிகையாளர் பேருந்திலிருந்து கீழே இறக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு பலத்த பதற்றம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - தனுசு

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - விருச்சிகம்

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - துலாம்

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - கன்னி
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



