கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஆந்திராவில் பயங்கரம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தீபாவளியின் போது விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர்

News image
Updated On :22 செப்டம்பர் 2018, 10:46 am

PTI


ராஜமஹேந்திரவரம்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தீபாவளியின் போது விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.

ராஜமஹேந்திரவரம் அருகே சுப்பாராவ்பேட்டா என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட மின்சாரக் கசிவினால், வீட்டுக்குள் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.