ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தனது கருத்துகளை டிவிட்டர் மூலம் பதிவு செய்து வரும் ராகுல், தெரிவித்திருப்பதாவது, இந்தியாவுக்காக பணியாற்றிய அனைத்து விமானப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், விமானப் படை விமானிகளை இழந்த குடும்பத்தினர், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அனைவரின் வலிகளையும் நாங்கள் உணர்கிறோம்.
உங்களது உணர்வுகளை நாங்கள் அறிகிறோம்.
உங்களை அவமரியாதை செய்து, உங்களிடம் இருந்து திருடியவர்களிடம் இருந்து நியாயத்தை நிச்சயம் பெற்றுத் தருவோம் என்று டிவீட் செய்துள்ளார்.