டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேகாலயாவில் முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவம்

மேகாலயாவில் இன்று நடைபெற்று வரும் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5

News image
Updated On :11 ஏப்ரல் 2019, 4:38 am

DIN

மேகாலயாவில் இன்று நடைபெற்று வரும் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கொளரவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

17-வது மக்களவைக்கான 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

இந்தநிலையில் மேகாலயா மாநிலம் மேற்கு காசி கில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சரியாக 7 மணிக்கு சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு சிறப்பு மரியாதையும், பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து தங்களது கடமையை பதிவு செய்வதற்காக வாக்காளர்களை மலர் தூவியும், மேளதாளங்கள் முழங்கியும், பதக்கங்களையும் வழங்கி கெளரவித்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறது தேர்தல் ஆணையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.