டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ததாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2019, 12:53 pm

DIN

ராஞ்சி: எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ததாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிற மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிர தேர்தல் பிரசாரத்தில் விலங்குகளும் விடுபடவில்லை. அவைகளும் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக எருமைகளில் பிரசார வாசகம்  எழுதப்பட்டு பிரசாரம் நடைபெற்றுள்ளது. எருமையொன்றின் மேல் “காங்கிரசை தேர்வு செய்யுங்கள். காங்கிரசுக்காக வாக்களியுங்கள்,” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.அத்துடன்  காங்கிரஸ் கட்சியின் சின்னமும் வரையப்பட்டிருந்தது. அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில்  வைரலாகப் பரவியது.

ஆனால் தேர்தல் ஆணையம், விலங்குகளை காட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.