கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீட்டில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி அவரது மனைவி ஹசீன் ஜஹன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹஸ்பூர் அலி நகரிலுள்ள முகமது ஷமி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற ஜஹன் அங்கு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வெளியேறுமாறு ஷமியின் சகோதரிகள் கூறிய பின்னர், அவர் தனது குழந்தையுடன் சென்று ஒரு அறையில் உள்பக்கம் பூட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இரு தரப்பிலும் உள்ள பிரச்னைகள் குறித்து விசாரிக்க நேரமில்லாத சூழலில், அம்ரோஹா எனுமிடத்தில் உ.பி. போலீஸாரால் ஹசீன் ஜஹன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஹசீன் ஜஹன் கூறியதாவது: எனது கணவரின் வீட்டில் இருப்பதற்கு எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதனால் தான் நான் இங்கு வந்தேன். ஆனால், அங்குள்ள ஷமியின் சகோதரிகள் என்னிடம் தவறாக நடந்துகொண்டனர். இதற்கு போலீஸாரும் உடந்தையாக உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு பதிலாக என்னை கைது செய்தனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


