மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இஸ்லாமியப் பெண்களைப் பற்றிய பாஜக தலைவரின் சர்ச்சைப் பேச்சு: ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி 

இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2019, 2:16 pm

DIN

புவனேஸ்வர்: இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

ஒடிஷா சட்டப்பேரவையில் வியாழனன்று விவாதத்தில் அவசர கதியில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். 

இதற்கு பதிலளித்து அவையின் பூஜ்ய நேரத்தில், ஒடிஷா சட்டப்பேரவை பா.ஜ.க. அவை துணை தலைவர் பி.சி. சேத்தி பேசினார். அவர் தனது பேச்சில்; ஆய்வறிக்கைகள் சிலவற்றை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அவர் தனது பேச்சில், 'மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர்' என்று பேசினார்.  இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜே.டி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தினர்.

ஆனால் அதற்கு பதிலளித்த சேத்தி, 'தான் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக விரோதம் காட்டும் வகையில் எதுவும் பேசவில்லை.  ஆய்வு அறிக்கைகளை அவையில் மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? ' என்று வினவினார்.

அவரது பேச்சில் உறுப்பினர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில், சேத்தியின் பேச்சு ஆய்வு செய்யப்படும் என்று சபாநாயகர் எஸ்.என். பேட்ரோ அவையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.