பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

இஸ்லாமியப் பெண்களைப் பற்றிய பாஜக தலைவரின் சர்ச்சைப் பேச்சு: ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி 

இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:12 pm IST

புவனேஸ்வர்: இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

ஒடிஷா சட்டப்பேரவையில் வியாழனன்று விவாதத்தில் அவசர கதியில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். 

இதற்கு பதிலளித்து அவையின் பூஜ்ய நேரத்தில், ஒடிஷா சட்டப்பேரவை பா.ஜ.க. அவை துணை தலைவர் பி.சி. சேத்தி பேசினார். அவர் தனது பேச்சில்; ஆய்வறிக்கைகள் சிலவற்றை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அவர் தனது பேச்சில், 'மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர்' என்று பேசினார்.  இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜே.டி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தினர்.

ஆனால் அதற்கு பதிலளித்த சேத்தி, 'தான் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக விரோதம் காட்டும் வகையில் எதுவும் பேசவில்லை.  ஆய்வு அறிக்கைகளை அவையில் மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? ' என்று வினவினார்.

அவரது பேச்சில் உறுப்பினர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில், சேத்தியின் பேச்சு ஆய்வு செய்யப்படும் என்று சபாநாயகர் எஸ்.என். பேட்ரோ அவையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.